திருச்சி அருகே ஆட்டோ-லாரி மோதல்: 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே ஆட்டோவுடன் லாரி மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு இரண்டு பேர் ஒரு ஆட்டோவில் தங்கள் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
திருவானைக்காவல் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தஒரு லாரி அந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ முழுவதுமாக நொறுங்கியது. ஆட்டோவின் டிரைவரும் அதில் பயணம் செய்த ஒருவரும் சம்பவம்நடந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றொருவர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்குக்கொண்டுசெல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications