சுடுகாட்டுக் கொட்டகை ஊழல்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சம்பத்திடம் சி.பி.ஐ. விசாரணைநடத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பித்தது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கில் அப்போதைய அமைச்சர்செல்வகணபதி, கலெக்டர் சம்பத் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து வந்தது. இந்நிலையில் சம்பத் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தத்தேவையில்லை என்று தமிழக அரசு சமீபத்தில் ஒரு ஆணை பிறப்பித்தது.

அரசின் இந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை இன்று விசாரித்தது.

இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள்உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+