காங்கிரசுக்கு திமுக ஆதரவு அளிக்க இளங்கோவன் வேண்டுகோள்
சேலம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் தங்கள் கட்சிக்குத் திமுக ஆதரவளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல்தலைவரான இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதியைச் சந்திக்கவும் தயாராகஇருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். பா.ஜ.கவுக்குமறைமுகமாகத் தன் ஆதரவைத் தெரிவிப்பதற்காகவே திமுக இவ்வாறு அறிவித்துள்ளது என பரவலாகக்கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என்று இளங்கோவன்கோரியுள்ளார். சேலத்தில் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவித்து விட்டது. எனவே திமுகவின்ஓட்டுக்கள் சிதறி விடாத வகையில், அக்கட்சி எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இதன்மூலம் மக்கள் விரோத அதிமுக அரசுக்குப் பாடம் புகட்ட நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கை கொடுக்கவேண்டும். இது தொடர்பாக தேவைப்பட்டால் நான் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவதற்கும் தயாராகவேஉள்ளேன்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கோரி கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்குக் கடிதங்கள் எழுதியுள்ளோம் என்றார் இளங்கோவன்.
இளங்கோவன் ஆரம்பத்தில் இருந்தே திமுகவுடன் கூட்டணிக்காக முயன்று வருகிறார். ஆனால், சோ.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் திமுகவுடன் கூட்டணியை ஆதரிக்கவில்லை. இளங்கோவன் தவிர மற்ற காங்கிரஸ்தலைவர்களின் போக்கு திமுகவுக்கும் பிடிக்கவில்லை.
சோனியா- மாறன் மட்டத்தில் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் டெல்லியில் நடந்தன. மாறன் உடல் நிலைபாதிக்கப்பட்டதால் அந்தப் பேச்சுக்கள் தொடரவில்லை. இந் நிலையில் வாஜ்பாயின் நேரடித் தலையீட்டால் மாநிலபா.ஜ.க. தலைகள் அடக்கப்பட்டுள்ளன. இதனால் திமுகவும் காங்கிரசுடன் கூட்டு சேர இப்போதைக்குவிரும்பவில்லை.
-->