நீதிபதிக்கு துப்பாக்கி குண்டு அனுப்பிய டாக்டர் பிடிபட்டார்
சென்னை:
சென்னையில் நீதிபதி ஒருவருக்கு துப்பாக்கிக் குண்டுடன் மிரட்டல் கடிதம் அனுப்பிய டாக்டர் போலீசாரிடம்பிடிபட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் டிரிபியூனல் எனப்படம் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்ற நீதிபதிசுப்பிரமணியத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மர்மக் கடிதம் வந்தது.
பார்சலில் வந்திருந்த அந்தக் கடிதத்துடன் துப்பாக்கிக் குண்டும் வைக்கப்பட்டிருந்தது. அதில் நீதிபதிக்குக்கடுமையான மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்தக் கடிதத்தை அனுப்பியவரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சென்னை-திருவொற்றியூரைச்சேர்ந்த எம்.பி.பி.எஸ். டாக்டரான கபிலன் என்பவர்தான் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இதை அவர் போலீசாரிடமும் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு போலி டாக்டர் தொடர்பாக நீதிமன்றத்தில் டாக்டர்கபிலன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் இந்த மிரட்டல் கடிதத்தைதுப்பாக்கிக் குண்டுடன் சேர்த்து வைத்து அனுப்பியதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து டாக்டர் கபிலனைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-->