அதிமுக சார்பில் சாத்தான்குளத்தில் போட்டியிட கடும் போட்டி: நூற்றுக்கணக்கானவர்கள் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாத்தான்குளத்தில் அதிமுக சார்பில் போட்டியிட மறைந்த எம்.எல்.ஏ. மணி நாடாரின் மனைவி ஜானகி, முன்னாள் எம்.எல்.ஏக்கள்உள்ளிட்ட ஏராளமானோர் மனு செய்துள்ளனர். அங்கு போட்டியிட அதிமுகவினர் இடையே பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

காங்கிரசில் இருந்து உடைத்துக் கொண்டு வெளியேறிய அதிமுக ஆதரவு தமிழ் மாநில காமராஜ் காங்கிரசைச் சேர்ந்த மணி நாடார்மறைந்ததால் தான் அங்கு தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அவரது மனைவி ஜானகியை அதிமுகவில் சேர்த்தார் முதல்வர்ஜெயலலிதா.

இந் நிலையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்கவுள்ள அந்த இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அதிமுகமனுக்களைப் பெற்று வருகிறது. கட்சியின் தலைமையகமான ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்று முதல் ரூ. 10,000 கட்சிமனுக்கள தரலாம் என்று றிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்றே பலரும் போட்டி போட்டுக் கொண்டு மனுக்களைக் கொடுத்தனர். காலை 9 மணிக்கே கட்சி அலுவலகத்தில்ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். இவர்கள் வரிசையில் நின்று ரூ. 10,000 செலுத்தி விண்ணப்ப மனுக்களை வாங்கி பூர்த்திசெய்து சமர்பித்தனர்.

கட்சியின் கொ.ப.செ. ஓ.எஸ். மணியன் மனுக்களை வழங்கினார். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அதிமுக ஆட்சி மன்றக் குழுஉறுப்பினர் சுலோசனா சம்பத் (காங் செயல் தலைவர் இளங்கோவனின் தாயார்) பெற்றுக் கொண்டார்.

மணி நாடாரின் மனைவி ஜானகி, முன்னாள் சேரன்மாதேவி எம்.எல்.ஏக்கள் ஆர்.பி. ஆதித்தன், முன்னாள் தூத்துக்குடி எம்.எல்.ஏ.ரமேஷின் தம்பி வி.பி.ஆர். சுரேஷ், படத் தயாரிப்பாளர் ராஜ்பால், பஸ் அதிபர் ராஜன்பாபு, முன்னாள் ராதாபுரம் எம.எல்.ஏ.நல்லதம்பியின் தங்கை லதா, முன்னாள் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. செல்லதுரை உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் அதிமுக சார்பில்போட்டியிட மனுக்களைக் கொடுத்தனர்.

கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான ஓ.எஸ். மணியன் மனுக்களை வழங்கினார். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அதிமுகஆட்சி மன்றக் குழு உறுப்பினர் சுலோசனா சம்பத் (காங் செயல் தலைவர் இளங்கோவனின் தாயார்) பெற்றுக் கொண்டார்.

இந்த மனுக்கள் மூலமே லட்சக்கணக்கான ரூபாய் அதிமுகவுக்கு வசூலாகியுள்ளது. இன்று மனு செய்தவர்களில்பெரும்பாலானவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாத்தான்குளத்தில் வெற்றியை நிர்ணயிக்கப் போவது இச் சமூக மக்கள்தான்.

தேர்தல் பணிக் குழுவில் மேலும் 6 பேர்:

இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழுவில் மேலும் 6 பேரை முதல்வரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சேர்த்துள்ளார்.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள்: திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன், எஸ்.என். ராஜேந்திரன், கோகுல இந்திரா, தளவாய் சுந்தரம், வளர்மதிஜெபராஜ்.

ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைவராகக் கொண்டு தேர்தல் பணிக்குழு செயல்பட்டு வருகிறது. அந்தக் குழுவில்இடம் பெற்றுள்ள அனைவரும் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன. இந்த நிலையில்தான் அமைச்சர் அல்லாத பிற நிர்வாகிகளும் தற்போது குழுவில்சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வர்ட் பிளாக் ஆதரவு:

இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் எல். சந்தானம் இதனைத் தெரிவித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+