நகை தொழிலாளர் குறித்த தமிழ் குறும்படத்திற்கு சர்வதேச விருது
நகை தொழிலாளர்களின் வாழ்க்கை முறையைச் சித்தரித்து உருவாக்கப்பட்ட "பொன் வண்ணம்" என்ற தமிழ்குறும்படத்திற்கு பிரான்சில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் "சர்வதேச பார்வையாளர் விருது" கிடைத்துள்ளது.
சேலம் ஹோலி கிராஸ் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் இந்தப் படத்தைஇயக்கியுள்ளார். முழுக்க முழுக்க சேலம் நகரிலேயே இந்தப் படத்தை எடுத்துள்ளார். சேலம் நகர நகைத்தொழிலாளிகளின் நிலை தான் கதைக் கரு.
கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைச் செய்யும் தொழிலில் இருந்தாலும் இந்தத் தொழிலாளர்கள் வாழ்வில்தங்கப் புன்னகை இல்லை.
இலக்கியம் மீது தீவிர ரசனை கொண்ட கார்த்திகேயன் ஒரு இலக்கியக் குறும்படத்தைத் தயாரிக்க முடிவுசெய்திருந்தார். ஆனால், தன்னைச் சுற்று வாழ்ந்து வரும் தங்க நகை தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்டஅவர் முதலில் அது குறித்துப் படம் பிடித்தார்.
"வேட்டை திரைப்பட அமைப்பு" என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் இக் குறும்படத்தை எடுத்துள்ளார்.
தங்க நகைத் தொழிலாளர் குடும்பங்களில் தாண்டவமாடும் வறுமையை சாதாரண வீடியோ காமிராவிலேயே படம்பிடித்தார். வீடியோகிராபர் தாஸ் இதற்கு உதவினார்.
இந்தக் குறும்படத்திற்கு "பொன் வண்ணம்" என்று பெயரிட்ட கார்த்திகேயன், இந்தப் படத்திற்கான பின்னணிஇசை, டப்பிங், எடிட்டிங் ஆகிய அனைத்தையும் சேலத்திலேயே முடித்து விட்டார். மொத்தம் 20 நிமிடங்களுக்குஇந்தக் குறும்படம் ஓடுகிறது.
"பொன் வண்ணம்" படத்தை பிரான்ஸ் திரைப்பட விழாவுக்கு நம்பிக்கை இல்லாமல் தான் கார்த்திகேயன் அனுப்பிவைத்தார். அங்கு யாரும் எதிர்பார்த்திராத வகையில் இப் படத்திற்கு சிறந்த சர்வதேச பார்வையாளர் விருதுகிடைத்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications