கடலூர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 8 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
கடலூர்:
கடலூர் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியைச் சேர்ந்த 8 சிறுவர்கள் தப்பியோடி விட்டனர்.
விழுப்புரத்தில் இயங்கி வந்த இந்தப் பள்ளி சமீபத்தில்தான் கடலூர் பீச் ரோட்டில் உள்ள பழைய கட்டடிடத்திற்குமாற்றப்பட்டது.
இங்கு மொத்தம் 11 சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2 பேர் சிறுமிகள்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 8 சிறுவர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து அதன் வழியாகத் தப்பிஓடிவிட்டனர்.
இவர்களில் சிதம்பரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்ற சிறுவனும், ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல்என்ற சிறுவனும் தங்களது வீடுகளுக்கு சென்றனர். ஆனால் அவர்களது பெற்றோர் மறுபடியும் அவர்களைசீர்திருத்தப் பள்ளிக்கேக் கொண்டு வந்து விட்டு விட்டனர்.
தப்பியோடிய பிரபு, ஸ்டீபன், கார்த்திகேயன், கார்த்திக் என்ற பிரகாஷ், மூர்த்தி, கோபி குமார் ஆகிய சிறுவர்களைபோலீஸார் தேடி வருகின்றனர்.
-->