சென்னையை அழகுபடுத்தும் பணிகளை பார்வையிட்டார் ஜெ.
சென்னை:
சென்னை மாநகரை அழகுபடுத்தும் பணிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னையை அழகுபடுத்தும் பல்வேறு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாகமெரீனா கடற்கரையும் அழகுபடுத்தப்படவுள்ளது.
இதில் ஒரு கட்டமாக காமராஜர் சாலை பிளாட்பாரங்களில் புதிதாகக் கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகளை ஜெயலலிதா திடீர் என்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் கூறினார்.
சாலை நடுவே அமைக்கப்படும் தடுப்புகளில் குரோட்டன் செடிகளை வளர்த்தால் அழகாக இருக்கும் என்றும்ஆலோசனை கூறினார்.
காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் டி.ஜி.பி அலுவலகம் எதிரே பிளாட்பாரம் அமைக்கப்பட்டுவரும் பணிகளையும் ஜெயலலிதா பார்வையிட்டார்.
முதல்வருடன் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்,தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன், சென்னை மாநகராட்சி ஆணையர் கலைவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
-->












Click it and Unblock the Notifications