கோவை அருகே சேற்றில் சிக்கிய யானை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் சிக்கிக் கொண்ட காட்டு யானையை வனத்துறையினரும்,பொதுமக்களும் இணைந்து பத்திரமாக மீட்டனர்.
ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக இந்த காட்டு யானை அமராவதி ஆற்றுக்குள் இறங்கியது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆற்றில் இருந்த சேற்றுக்குள் அந்த யானை சிக்கிக் கொண்டது. கனத்தை உடலைவைத்துக் கொண்டு வெளியே வர முடியாமல் அது திணறியது.
இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வேகமாகவிரைந்து வந்தனர்.
வனத்துறை பாதுகாவலர் கணேசன் தலைமையில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. அருகில் இருந்த ராணுவப்பள்ளியின் ஊழியர்களும் உதவிக்கு வந்தனர். பொதுமக்களும் கை கொடுத்தனர்.
சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அந்த யானை பத்திரமாக மீட்கப்பட்டது. பின்பு அது வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications