கங்குலிக்கு பாக். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் செளரவ் கங்குலியைக் கொல்ல பாகிஸ்தானைச் சேர்ந்தலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்ததைத் தொடர்ந்துஅவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதிகளின் மிரட்டல் இருந்துகொண்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், கங்குலிஉள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவருக்கும் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கங்குலியைத் தீர்த்துக் கட்ட லஷ்கர் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தீவிரவாதிகளின் டெலிபோன் செய்திகளை இடைமறித்துக் கேட்டபோது இதுதெரிய வந்துள்ளது.
இதையடுத்து கங்குலிக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருடைய கொல்கத்தா வீட்டில்ஆயுதமேந்திய கமாண்டோ போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கமாண்டோக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கங்குலியின் வீட்டை 24 மணி நேரமும்அவர்கள் கண்காணித்து வருவார்கள். கங்குலி காரில் வெளியே செல்லும்போது அதற்குப் பாதுகாப்பாககமாண்டோக்களின் வாகனங்களும் உடன் செல்லும்.
மேலும் கங்குலிக்கு சாதாரண உடையிலும் போலீசார் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர் என்று கொல்கத்தா போலீஸ்ஏ.எஸ்.பியான ராஜேஷ் சிங் இனறு நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications