"கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை": காளிமுத்து குறித்து கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கவியரங்கங்களில் மன்னர்களை புகழ்ந்து கவி பாடும் கவிஞரைப் போல, முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆளுநர்ராமமோகன் ராவ் சட்டசபையில் புகழ்ந்து தள்ளியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஆளுநர் உரை குறித்து இன்று கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், முதல்வரை முதல்வரே புகழ்ந்து கொள்வதுபோல அரசின் ஆளுநர் உரை அமைந்திருந்தது.

கவியரங்கங்களில் மன்னரைப் புகழ்ந்து கவிஞர்கள் வர்ணித்து கவி பாடுவது வழக்கம். அதுபோல ராமமோகன்ராவும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து வர்ணனை செய்துள்ளார்.

தமிழக சட்டசபையில் திமுக புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்ததைக் கண்டிக்கும் தமிழக பா.ஜ.கவினர்,இதேபோல கர்நாடக பா.ஜ.கவினருக்கும் அறிவுரை கூறியிருந்தால் அங்கு மிகப் பெரும் அமளி துமளியை அந்தமாநில சட்டசபை சந்தித்திருக்காதே?

நாகப்பா என்ற ஒரு உயிருக்காக கர்நாடக பா.ஜ.கவினர் அம்மாநில சட்டசபையை அமளி, துமளி செய்துவிட்டனர். ஆனால் காவிரி டெல்டா பகுதியில் 12 உயிர்கள் செத்து மடிந்தும் கூட அது குறித்துத் தங்களுக்குக்கவலையில்லை என்று தமிழக பா.ஜ.கவினர் கூறுகிறார்களா?

கடந்த 25 ஆண்டு காலமாக ஆளுநர் உரையை தமிழில் படிக்கும் வாய்ப்பு, இந்த முறை சபாநாயகர்காளிமுத்துவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் "கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போல மரபு, மாற்றம் என்றெல்லாம் பேசிதனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டுள்ளார் சபாநாயகர்.

இந்த ஆட்சியில் சட்டசபையில் ஆளுநர் உரையை தமிழில் படிக்கவும் தடையா? தமிழுக்கு இந்த ஆட்சியாளர்கள்கொடுக்கும் தகுதி இதுதானா என்று கேட்டார் கருணாநிதி.

கருணாநிதியை சந்தித்த பாஜக தலைவர்கள்:

இதற்கிடையே பா.ஜ.கவின் அகில இந்தியப் பொதுச் செயலாளரான இல. கணேசன், தமிழக பா.ஜ.க. தலைவர்கிருபாநிதி ஆகியோர் இன்று கருணாநிதியைச் சென்று சந்தித்து மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலிமாறனின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

சென்னையில் இது தொடர்பாக இன்று நிருபர்களிடம் இல. கணேசன் கூறுகையில்,

திமுகவை நாங்கள் எப்போதும் எதிரிக் கட்சியாகவே கருதவில்லை. அந்த வகையில்தான் தமிழகத்தில் அந்தக்கட்சியுடன் உறவு இல்லாத நிலையிலும் இன்று கருணாநிதியைச் சென்று சந்தித்தோம்.

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர் வீட்டுக்குச் சென்று உடல் நலம் விசாரிப்பதுதான்மனிதாபிமானம்.

அதன்படிதான் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மாறனின் உடல் நலம் குறித்துகருணாநிதியைச் சந்தித்து கேட்டறிந்தோம். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை.

இந்தச் சந்திப்பின்போது அரசியல் குறித்தும் பேசினோம். ஆனால் சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்தெல்லாம்நாங்கள் அவருடன் பேசவில்லை. சாத்தான்குளத்தில் பா.ஜ.க. போட்டியிடுவது குறித்து வரும் 29ம் தேதிஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார் இல. கணேசன்.

பிரதமர் அலுவலக இணை அமைச்சரான விஜய் கோயல் சமீபத்தில் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றார். அப்போது, தமிழக பா.ஜ.க. தலைவர்களை "அடக்கி" வைப்பதாக அவர் கருணாநிதியிடம் உறுதிஅளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்துதான் கணேசனும், கிருபாநிதியும் இன்று கருணாநிதியைச் சென்று சந்தித்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+