பட்டினிச் சாவுகள் நடக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
சென்னை:
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பட்டினிச் சாவுகள்நிகழவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
காவிரி டெல்டாப் பகுதிகளில் நடக்கும் பட்டினிச் சாவுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் விவசாயிகளுக்குதினசரி 500 கிராம் அரிசி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வக்கீல் நடராஜன் என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
ஏற்கனவே, பட்டினிச் சாவுகள் விஷயத்தில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சூடு கொடுத்துள்ளது. பட்டினிச் சாவுகள்நடப்பதை அனுமதிக்கும் இந்த அரசு மக்கள் நல அரசு தானா? என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இந் நிலையில் பட்டினிச் சாவுகள் குறித்த பொது நல வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயசிம்ம பாபு மற்றும்பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன் ஆஜராகி வாதாடினார். தன்னுடையவாதத்தில்,
பத்திரிக்கைச் செய்திகளை மட்டும் அடிப்படையாக வைத்து, உண்மை நிலவரம் தெரியாமல் மனுதாரர் இந்தவழக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே இது விசாரணைக்கே உகந்ததல்ல. காவிரி டெல்டாப் பகுதிகளில் வறட்சிநிவாரணப் பணிகளை அரசு முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச உணவு அளிக்கப்பட்டுவருகிறது.
இதுதொடர்பாக அரசு எடுத்துள்ள மற்ற நடவடிக்கைகள் குறித்து பதில் மனுவில் விரிவாக தெரிவிக்கப்படும்.
காவிரி டெல்டாப் பகுதிகளில் நடந்துள்ள சாவுகள் பட்டினிச்சாவுகள் அல்ல. இதுதொடர்பாகவும் அரசுத் தரப்பில்விளக்கம் தரப்படும்.
மேலும் விவசாயிகளுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றார்சந்திரன்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அப்போது அரசு பதில்மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->