சாத்தான்குளம்: அதிமுக தேர்தல் பணிக் குழுவில் மேலும் 6 பேர்
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழுவில் மேலும் 6 பேரை முதல்வரும், அக்கட்சியின்பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சேர்த்துள்ளார்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள்: திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன், எஸ்.என். ராஜேந்திரன், கோகுலஇந்திரா, தளவாய் சுந்தரம், வளர்மதி ஜெபராஜ்.
ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைவராகக் கொண்டு தேர்தல் பணிக்குழுசெயல்பட்டு வருகிறது. அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைவரும் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன. இந்த நிலையில்தான் அமைச்சர் அல்லாத பிறநிர்வாகிகளும் தற்போது குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவினர் விண்ணப்பம்:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று தங்கள்விண்ணப்பங்களைப் பெற்றனர்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும் என்றுஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று நூற்றுக்கணக்கான அதிமுகவினர் தலைமை அலுவலகத்தில் கூடினர். போட்டியிட விரும்பும்ஒவ்வொருவரும் ரூ.10,000 பணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இன்று மாலை வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அதிமுக மகளிரணித் தலைவரான சுலோசனா சம்பத்தெரிவித்தார்.
பார்வர்ட் பிளாக் ஆதரவு:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க அகில இந்தியபார்வர்ட் பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது.
கட்சியின் இளைஞர் அணி மாநாடு மதுரையில் நடந்தது. அப்போது ஆளும் அதிமுகவுக்கு சாத்தான்குளம் இடைத்தேர்தலில் ஆதரவு தர முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச உணவுக்குப் பதில் அரிசி வழங்கவும், இலவசமின்சாரத்தைத் தொடர்ந்து வழங்கவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் எல். சந்தானம் தலைமை வகித்தார்.
-->












Click it and Unblock the Notifications