கருணாநிதியுடன் வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு
சென்னை:
பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
நேற்று இரவு கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் வாஜ்பாய், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நலம் குறித்து விசாத்தார்.
பின்னர் இருவருமே மாநில, தேசிய அரசியல் நிலவரம் குறித்தும் விவாதித்தனர்.
அமெரிக்காவில் ஹூஸ்டன் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள மாறன் விரைவில் பூரண நலம் பெறவாழ்த்துத் தெவித்த வாஜ்பாய், அவருக்குத் தரப்பட்டு வரும் சிகிச்சை கருணாநிதியிடம் கேட்டறிந்தார்.
அதேபோல, அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுவும் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். மாறன்உடல் நிலை குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் பேசினர்.
விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது. அப்போது சில அமைச்சர்கள் பதவியிழக்கவுள்ளனர். முரசொலிமாறனே தொடரலாமா அல்லது வேறு யாரயாவது திமுக சார்பில் அமைச்சராக்க விரும்புகிறீர்களா என வாஜ்பாயும் நாயுடுவும்கருணாநிதியிடம் கேட்டதாகத் தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications