"திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ரயிலில் மினி சினிமா தியேட்டர்
சென்னை:
கன்னியாகுமரியிலிருந்து, டெல்லி வரை செல்லும் "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ரயிலில் பயணிகள் வசதிக்காக 100பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான மினி தியேட்டர் அமைக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர்ஏ.கே. மூர்த்தி கூறினார்.
சென்னையில் பீச் முதல் தாம்பரம் வரையிலான அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. இன்றுகாலை இந்தப் பாதையில் சோதனை ரயில் ஓடியது.
அப்போது மூர்த்தியும் அந்த ரயிலில் பயணம் செய்தார். அவருடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆனந்த்உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். பின்னர் நிருபர்களிடம் மூர்த்தி பேசுகையில்,
24 மணி நேரமும் அதற்கு மேலும் ஓடும் ரயில்களில் பல வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ரயிலில் மினி சினிமா தியேட்டர் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
ஒரு ரயிலில் 24 பெட்டிகள் இருக்குமானால் அதில் ஒரு பெட்டியில் இந்த மினி தியேட்டர் இருக்கும். இங்கு தினசரி5 முதல் 6 படங்கள் வரை திரையிடப்படும்.
ரயிலில் பயணம் செய்யும்போது போரடிக்காமல் இருப்பதற்காகவே இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது என்றார்மூர்த்தி.
அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு ரயில் பயணிகளுக்கு அதிக சந்தோஷத்தை அளித்து வரும் மூர்த்தி ஏற்கனவேரயில்களில் குழந்தைகளுக்குத் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்தி தாய்மார்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.
தற்போது மினி தியேட்டரை அறிமுகப்படுத்தி சினிமா ரசிகர்களையும் "கவர்" செய்து விட்டார் மூர்த்தி.
-->