வெளியில் பூட்டு ... வீட்டுக்குள் விபச்சாரம்!
சென்னை:
வெளியில் வீட்டை பூட்டிக் கொண்டு வீட்டுக்குள் விபச்சாரம் செய்த கேரள அழகி உள்ளிட்ட விபச்சாரப்பெண்களை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
சென்னை ராயப்பேட்டை ராமாராவ் கார்டன் பகுதியில் உள்ள வி.எம்.தெருவில் வீட்டை வெளியில் இருந்து பூட்டிக்கொண்டு உள்ளே விபச்சாரம் நடந்து வந்தது.
வீடு வெளியில் பூட்டப்பட்டிருக்கும்.
ஆனால், கஸ்டமர்கள் போய் அந்த வீட்டின் அருகே நின்றால் ஒரு பெண் வருவார். யாரைப் பாக்கனும், என்னவேண்டும் என்று கேட்பார். அவரிடம் பெண் வேண்டும் என்று கேட்டால் உடனே ரூ. 2,000 பணம் கொடுங்கள்என்பார்.
பணத்தைத் தந்தவுடன் வீட்டின் பூட்டைத் திறந்துவிடுவார். உள்ளே போனால் ஒரு பெண் இருப்பார். பணம்கொடுத்தவர் அவருடன் குஜால் செய்ய அனுமதிக்கப்படுவார். அதே நேரம் கலா வீட்டைப் பூட்டிக் கொண்டுவெளியே போய்விடுவார்.
இந்த வித்தியாசமான விபச்சாரம் குறித்து அப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்துபோலீசார் மாறு வேடத்தில் அந்த வீட்டை நோட்டமிட்டனர்.
வெளியே பூட்டு போடப்பட்டிருந்த அந்த வீட்டின் அருகே மாறுவேட போலீசார் போய் நின்றனர். இவர்கள்நிற்பதைக் கண்டதும் அங்கு கலா என்ற பெண் வந்தார். என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு போலீஸார், பெண் வேண்டும் கூற, ரூ. 2000 கொடுங்கள் என்று கலா கேட்டார்.
போலீஸாரும் பணத்தைக் கொடுத்தனர். இதையடுத்து வீட்டின் பூட்டைத் திறந்துவிட்ட அந்தப் பெண் போலீசாரைஉள்ளே அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் இருந்த லீலா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தினார். உடனே இந்தஇருவரையுமே போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கலா பர்மா நாட்டைச் சேர்ந்த பெண் என்றும், லீலாவுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் வயநாடுஎன்றும் தெரிய வந்தது.
மலேசியாவுக்கு வேலைக்குச் செல்ல லீலா கேரளாவிலிருந்து வந்திருப்பதாக கூறி அக்கம் பக்கதிதனரை ஏமாற்றிவந்துள்ளார் கலா. இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications