பவானியில் அணை கட்ட கேரளத்துக்கு மத்திய அரசு தடை
டெல்லி:
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை உடனே நிறுத்துமாறு கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தக்கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
முக்காலி என்ற இடத்தில் இந்த அணையைக் கட்டி தமிழகத்துக்கு நீர் செல்வதைத் தடுக்க கேரளம் முயன்று வருகிறது. இதற்கு கோவை,ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அணைக்கட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நிலைமை மோசமடைவதற்குள் இதில் மத்திய அரசு தலையிட்டது. மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு தனது அமைச்சகத்தின்உயர் அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்பி ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
அந்தக் குழு முக்காலி பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது. இந்த அணை கட்டும் பணியில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகள்மீறப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது.
கால்வாயை திசை திருப்புவாதச் சொல்லி பெங்களூரில் உள்ள மண்டல வன அதிகாரியிடம் அனுமதி வாங்கிவிட்டு அங்கு கேரளம்அணையை கட்டி வருவதும், மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் மிகப் பெரிய மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளதும்,இதனால் பயங்கர மண் அரிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தங்களது ஆய்வறிக்கையை அதிகாரிகள் டி.ஆர். பாலுவிடம் சமர்பித்தனர். இதையடுத்து இப் பிரச்சனையை பிரதமரிடம்எடுத்துச் சென்றார் பாலு. இதைத் தொடர்ந்து அணை கட்டும் பணியை உடனே நிறுத்துமாறு கேரள அரசுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.
இன்று இதற்கான உத்தரவு டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்குப் பறந்தது. மத்திய அரசின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜே.பி.தாக்கூர் இதற்கான உத்தரவை கேரளத்துக்கு அனுப்பினார். கேரளாவின் தலைமை வன அதிகாரிக்கு இது தொடர்பான உத்தரவு தந்தி மூலம்அனுப்பப்பட்டுள்ளது.
இத் தகவலை திமுக முன்னாள் அமைச்சரும் அணைக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருபவருமானபொங்கலூர் பழனிச்சாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->