ஏறிய தங்கம் விலை இறங்குகிறது
சென்னை:
கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை மெதுவாக இறங்கி வரத் தொடங்கியுள்ளது.
ஈராக்கில் போர் மேகம் சூழ்ந்ததாலும், உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீர் என அதிகரித்ததாலும், தமிழகம்உள்பட நாட்டின் பல மாநிலங்களிலும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
8 கிராம் கொண்ட ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.4,392 ஆனது. இதனால் தங்க நகைகள் வாங்கநினைத்தோர் அதிர்ச்சியில் அமைதியாகி விட்டனர். நகைக் கடைகளில் கூட்டம் டல் அடித்தது.
தங்க விலை அதிகமாக இருந்ததால் பழைய நகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் பலரும் தங்களதுபழைய நகைகளை நில்ல விலைக்கு விற்கத் தொடங்கினர்.
இந் நிலையில் தற்போது தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை, 10 கிராம் ஸ்டாண்டர்ட் தங்கத்தின் விலை ரூ. ரூ. 5,925 ஆக இருந்தது. அதுவே இன்றுகாலை ரூ. 5,870 ஆகக் குறைந்தது.
-->












Click it and Unblock the Notifications