காட்டுப் பகுதியில் பிணம் மீட்பு: வீரப்பன் கொன்றானா?
மைசூர்:
வீரப்பன் தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில் காட்டுப் பகுதியில் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது.
குண்டுக் காயங்களுடன் கிடந்த அந்த நபர் யார் என்று தெரியவில்லை. வீரப்பன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து சில தகவல்கள்கிடைத்ததையடுத்து தமிழக- கர்நாடக அதிரடிப்படையினர் மாதேஸ்வரன் மலைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
கடந்த 3 நாட்களாகவே இதுவரை இல்லாத அளவுக்கு வீரப்பன் வேட்டை சூடு பிடித்துள்ளது. 3 ராணுவ ஹெலிகாப்டர்களும்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அவை காட்டுப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றன.
இந் நிலையில் கோணக் கரை என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் ஒரு பிணம் கிடந்தது. இவர் யார் என்று தெரியவில்லை. வீரப்பன்கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பதும் தெரியவில்லை. இந்த உடலில் பல குண்டுக் காயங்கள் இருந்தன.
இந்த உடலை அதிரடிப்படையினர் மீட்டு மாதேஸ்வரன் மலை மருத்துவமனையில் வைத்துள்ளனர். இவரை அடையாளம்கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே வீரப்பன் வேட்டைக்கு கர்நாடகம் கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. இதற்காக பெங்களூர், மைசூர், குல்பர்கா,மங்களூர் ஆகிய இடங்ளில் இருந்து சுமார் 1,000 ரிசர்வ் போலீஸ் படையினர் மாதேஸ்வரன் மலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வீரப்பனை சுமார் 10 கி.மீ. தொலைவுக்குள் சுற்றி வளைத்துவிட்டதாக அதிரடிப்படையினர் நம்புகின்றனர்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications