நாகப்பா கடத்தல்: வீட்டிற்குள்ளேயே சதியா?- நீதிபதி சந்தேகம்
பெங்களூர்: சந்தனக் கடத்தல் வீரப்பனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்படுவதற்கு முன் அவருடையவீட்டிலேயே கடத்தல் சதி நடந்திருப்பதாக இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கமிஷனின் தலைவர் நீதிபதிவைத்தியநாதன் கூறினார்.
நாகப்பா கடத்தல் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி நபர் விசாரணைக் கமிஷன் தன்னுடையவிசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.
நீதிபதி வைத்தியநாதன் முதலில் நாகப்பாவின் வீட்டில் விசாரணை நடத்தினார். அவருடைய வீட்டைமுழுவதுமாகச் சுற்றிப் பார்த்த நீதிபதி, அவ்வீட்டில் உள்ளவர்களிடமும் நாகப்பா கடத்தலை நேரடியாகப்பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தினார்.
பின்னர் நாகப்பா பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட செங்கடி காட்டுப் பகுதிக்கும் நீதிபதி சென்று பார்த்தார். அங்குதுப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம்கூறுகையில்,
நாகப்பாவை வீரப்பன் கடத்துவதற்கு முன்பே அவருடைய வீட்டில் இதற்கான சதி நடத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
நாகப்பா வீட்டுக் கதவைப் பலமுறை தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக வீரப்பன் வீட்டுக்குள்நுழைந்துள்ளான். ஆனால் ஜன்னல் உடைக்கப்பட்டதற்கான எந்தவிதமான அறிகுறியும் அதில் இல்லை.
ஜன்னலின் ஒரு ஆணியோ அல்லது ஸ்குரூவோ கழன்று போனதாகவும் தெரியவில்லை. இதனால் யாரோ திட்டம்போட்டே ஜன்னல் வழியாக வீரப்பன் உள்ளே நுழைவதற்கு வசதியாக அது வைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.இது எனக்குப் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்ததாக காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டகுண்டுகளைப் பரிசோதனை செய்ய வேண்டும். அவை தமிழக அதிரடிப்படையினருடைய ஏ.கே. 47 துப்பாக்கியில்பயன்படுத்தப்பட்டவையா அல்லது கர்நாடக அதிரடிப்படையினருடையதா என்பது குறித்து இனிமேல்தான்ஆராய வேண்டும்.
இதற்காக தமிழக அரசிடமிருந்து நான் முதலில் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால்தான்தமிழப் போலீசாரை நேரடியாக விசாரிக்க முடியும். ஆனால் அனுமதி கிடைக்குமா என்பது குறித்து என்னால்இப்போது எதுவும் கூறமுடியாது என்றார் நீதிபதி வைத்தியநாதன்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications