சாத்தான்குளத்தில் அதிமுக தேர்தல் பணிகள் தீவிரம்
சென்னை:
சாத்தான்குளம் தொகுதியை மண்டலவாரியாகப் பிரித்து அதிமுக தேர்தல் பணிக் குழுவினர் தீவிர தேர்தல்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை அமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தேர்தல் பணிக்குழுஅமைக்கப்பட்டுள்ளது. இதில்பெரும்பாலானவர்கள் அமைச்சர்கள்தான். மற்றவர்களும் கட்சியின் பல்வேறுமுக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களே.
தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவினரே தேர்தல் பணிகளில் முழுத் தீவிரம் காட்டி வருகின்றனர். சுவர்விளம்பரங்களிலும் அதிமுகவினரே முன்னணியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் விளம்பரங்களும் அதிகஅளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் பணிகளை எளிதாகவும், அதே சமயத்தில் எந்தப் பகுதியும் விட்டுப்போகாதவாறும்பார்த்துக்கொள்ள தொகுதியையே பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து அதிமுகவினர் தேர்தல் பணியாற்றிவருகின்றனர்.
இதற்காக சாத்தான்குளம் தொகுதி எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கருங்குளம், செய்துங்கநல்லூர்,நாசரேத், பேய்க்குளம், சாத்தான்குளம், தட்டார்மடம், தலூர், ஆழ்வார் திருநகரி ஆகியவையே இந்தமண்டலங்கள்.
பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மண்டலத்துக்கும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சாத்தான்குளத்திலேயே முகாமிட்டு பணியாற்ற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக 30க்கும் மேற்பட்ட வீடுகளும் "புக்" செய்யப்பட்டு அட்வான்ஸ்கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் நேற்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில்விரைவில்முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணம் குறித்த விவரம் அதிமுக தலைமைக் கழகத்தால்வெளியிடப்படவுள்ளது.
-->












Click it and Unblock the Notifications