பரிதி கைது விவகாரம்: 8ம் தேதி எதிர்க் கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம்
சென்னை:
திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சித் தலைவரான கருணாநிதிமுன்னிலையில் வரும் 8ம் தேதி எதிர்க் கட்சிகள் நடத்தும் கண்டனப் பொதுக் கூட்டம் சென்னையில்நடைபெறவுள்ளது.
கடந்த 30ம் தேதி தமிழக சட்டசபையில் த.மா.கா.கா. தலைவரான டாக்டர் குமாரதாஸை கொலை செய்து விடுவேன்என்று மிரட்டிய குற்றத்திற்காக மறுநாள் நள்ளிரவு பரிதி கைது செய்யப்பட்டார்.
முன்னதாக சட்டசபைக் கூட்டத் தொடரிலிருந்தும் பரிதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து திமுகஎம்.எல்.ஏக்கள் 30ம் தேதி வெளிநடப்பு செய்தனர். மறுநாள் நடந்த சட்டசபைக் கூட்டத்தையும் அவர்கள்புறக்கணித்தனர்.
மேலும் பரிதி கைது செய்யப்பட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்றுமுதலில் கருணாநிதி எச்சரித்திருந்தார்.
ஆனால் கடந்த 2ம் தேதி பா.ஜ.கவைத் தவிர அனைத்து எதிர்க் கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தகருணாநிதி, பரிதி கைதைக் கண்டித்து எதிர்க் கட்சித் தலைவர்கள் பங்கு பெறும் கண்டனப் பொதுக் கூட்டம்நடைபெறும் என்று அறிவித்தார்.
அதன்படி வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லையில் இந்தக்கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளரான அன்பழகன்தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்,எம்.ஜி.ஆர். கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, புதிய தமிழகம், இந்தியதேசிய லீக் மற்றும் தமிழ் மாநில லீக் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
கடந்த 2ம் தேதி நடைபெற்ற எதிர்க் கட்சிக் கூட்டத்தில் தனக்கு அழைப்பு விடுக்கப்படாததைத் தொடர்ந்து, அதற்குமறுநாளே பா.ஜ.க. சிறிது இறங்கி வந்தது. பரிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அக்கட்சியின்பொதுச் செயலாளரான இல. கணேசன் அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் பரிதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தவோது, பா.ஜ.கவினர்சட்டசபைக்குள்ளேயே இருந்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->