ரேஷன் கடைகளில் மது விற்பனையா?- எஸ்.ஆர்.பி. கண்டனம்
சென்னை:
பெண்கள் வந்து போகும் ரேஷன் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி கொடுக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்கூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் இன்று நிருபர்களிடம் எஸ்.ஆர்.பி. பேசுகையில்,
ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ரேஷன்கடைகளுக்கு வருவோரில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தான். இந்த நிலையில் அங்கு மது விற்பனைசெய்யப்பட்டால் பல்வேறு அறுவறுக்கத்தக்க நிகழ்வுகள் நேரிடலாம்.
எனவே இந்த யோசனையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார் எஸ்.ஆர்.பி.
உடனிருந்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளரான ஜி.கே. வாசன் கூறுகையில், சாத்தான் குளத்தில் காங்கிரஸ்கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் சீரிய முறையில் தேர்தல் பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவைத் தோற்கடித்த மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்றார்வாசன்.
-->