மதுரை உயர் நீதிமன்ற கிளை கட்டுமான பணியில் ஊழல்?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை உலகனேரி பகுதியில் கட்டப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளைக் கட்டடத்தை ஊழல் ஒழிப்புப்பிரிவு போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

உயர் நீதிமன்றக் கிளைக் கட்டடத்தின் கட்டுமானப் பணியில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்தபுகாரையடுத்து இந்த விசாரணை நடந்தது. சில பொதுப்பணித் துறை பொறியாளர்களிடமும் விசாரணைநடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

ரூ.44 கோடி நிதியை இந்தக் கட்டுமானப் பணிக்காக தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால் அந்த அளவுக்குத்தரமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று புகார்கள் கிளம்பின.

மேலும், ஒப்பந்த காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் ஊழல் புரிவதற்காகவே கட்டுமானப்பணிகள் தாமதமடைந்து வருவதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவுக்குப் புகார்கள் வந்தன.

இதையடுத்தே இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது முக்கால் வாசிக்கும்மேல் தயாராகிவிட்ட மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் கட்டடத்தை ஊழல் தடுப்புப் போலீசார் பார்வையிட்டனர்.

கட்டடத்தின் தரத்தை சோதிப்பதற்காக அதன் சில சாம்பிள்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பவும் ஊழல் தடுப்புபோலீஸார் முடிவு செய்துள்ளனர்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் முடிவில்தான் உயர் நீதிமன்ற கிளைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+