மதமாற்ற தடை சட்டம்: பால் தினகரனுடன் சங்கராச்சாரியார் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கிருஸ்தவர்கள் அரசு கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தவறாகப்புரிந்து கொண்டிருப்பதாக கிருஸ்தவ மதபோதகரான பால் தினகரனிடம் காஞ்சி சங்கராச்சாரியாரானஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.

நேற்று டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து அயோத்தி விவகாரம் தொடர்பாகப் பேச்சு நடத்திய காஞ்சிசங்கராச்சாரியார், இன்று தினகரனைச் சந்தித்துப் பேசினார்.

தெற்கு டெல்லியில் உள்ள கமாட்சி கோவிலுக்குச் சென்று காஞ்சி சங்கராச்சாரியாரைச் சந்தித்த தினகரன் அவருடன்சுமார் 30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார். அப்போது அவரிடம் சங்கராச்சாரியார் கூறுகையில்,

தமிழகத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அங்குள்ள கிருஸ்தவர்கள்தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

சிலர் அரசியல் லாபம் பெறுவதற்காகவே சிறுபான்மை இனத்தவர்களிடம் இந்தச் சட்டத்தைப் பற்றி தவறானகருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைப் பற்றிய உண்மையான கருத்துக்களை நீங்கள்தான் கிருஸ்தவ மக்களிடம்தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். கிருஸ்தவ மக்களுக்கு எதிரான சட்டமல்ல என்பதையும் நீங்கள்தான் புரியவைக்க வேண்டும் என்றார் சங்கராச்சாரியார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+