சன் டி.வி. நிருபர் ஜாமீனில் விடுதலை
சென்னை:
வக்கீலைத் தாக்கியதாகக் துை செய்யப்பட்ட சன் டி.வி. நிருபர் சுரேஷ் குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிக்கச் சென்றபோது, வக்கீல்கள் சங்கத் தலைவர்ராமசாமி என்பவரைத் தாக்கியதாக சுரேஷ் குமார் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சுரேஷ் குமாரின் சார்பில் அவரது வக்கீல்கள் வில்சன், சரவணக்குமார் ஆகியோர், ஜாமீன் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை நீதிபதி நாகப்பன் விசாரித்தார். பின்னர் சுரேஷ் குமாருக்கு ரூ.5,000 தனி நபர் ரொக்க ஜாமீன்மற்றும் அதே அளவிலான இரு நபர் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
தினசரி காலை 9மணி முதல் 10 மணிக்குள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்றும்நீதிபதி உத்தரவிட்டார்.
சுரேஷ் குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்காக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்குபத்திரிக்கையாளர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
சுரேஷ் குமார் விஷயத்தில் தலைமை நீதிபதி எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக சென்னைபத்திரிக்கையாளர் மன்றம், பத்திரிக்கையாளர் நடவடிக்கைக் குழு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நன்றிதெரிவித்துள்ளன.
-->












Click it and Unblock the Notifications