போலீஸ் சங்கம் அமைக்கும் விவகாரம்: டி.ஜி.பிக்கு எதிரான சு. சுவாமியின் மனு தள்ளுபடி
மதுரை:
தமிழக டி.ஜி.பி. மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் தண்டனை வழங்கக் கோரிய ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காவலர்கள் சங்கம் அமைப்பது தொடர்பான காவலர்களின் கோரிக்கையை டி.ஜி.பி. பரிசீலனை செய்ய வேண்டும்என்று உயர் நீதிமன்றம் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.
ஆனால் சங்கம் அமைப்பது தொடர்பாகக் காவலர்கள் விடுத்திருந்த கோரிக்கையை தமிழக டி.ஜி.பி. நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து டி.ஜி.பியின் செயல் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும் என்றும் எனவே நீதிமன்ற அவமதிப்பு சட்டம்12வது பிரிவின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் சுவாமி மனு தாக்கல்செய்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டி.ஜி.பியின் செயல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இல்லை என்று கூறிசுவாமியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
-->