நெடுமாறனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வைகோ வலியுறுத்தல்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும்தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ. நெடுமாறனுக்கு சென்னையில் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நெடுமாறனுக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல் நிலை பாதித்ததைத் தொடர்ந்து, கடலூர் சிறையில்அடைக்கப்பட்டிருந்த அவர் அவ்வூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெடுமாறனுக்கு சிறப்பு சிசிச்சை அளிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். பொடாசட்டத்தின் கீழ் இவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது நெடுமாறன் வந்த போலீஸ் வேன் விபத்தில் சிக்கிய செய்திஎனக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நெடுமாறன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதும் கவலைஅளிப்பதாக உள்ளது.
ஓரளவு குணம் அடைந்தவுடன் நெடுமாறனை சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சைப்பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவ்வறிக்கையில் வைகோகூறியுள்ளார்.
கருணாநிதியும் கவலை:
இதற்கிடையே நெடுமாறன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் கருணாநிதியும் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
நெடுமாறன் மீதான பழைய வழக்குகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து நாடு முழுவதும் அங்கும் இங்கும் போலீஸ்வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் பலவீனமான அவருடைய உடல் தாங்குமா?
ஹைதர் அலி காலத்து வழக்குகளுக்காக வைகோவையும் போலீசார் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றனர்என்றார் கருணாநிதி.
-->