ஹெலிகாப்டரில் பறந்து வீரப்பனைத் தேடும் அதிரடிப் படையினர்
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க ஹெலிகாப்டர் மூலம் அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள்.
மேட்டூர் வனப் பகுதியில் நேற்று ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் இந்தஹெலிகாப்டர் எங்கிருந்து வந்தது என்ற விவரம் தெரியவில்லை.
இருப்பினும் வீரப்பனைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது மட்டும்உறுதியாகியுள்ளது.
திடீரென்று தங்களது கிராமங்களின் மேலே ஹெலிகாப்டர் பறந்ததைப் பார்த்த மேட்டூர் மற்றும் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பீதியடைந்தனர்.
இருப்பினும் அதிரடிப்படையினர்தான் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர்களதுபயம் தெளிந்தது.
சமீபத்தில் சென்னையில் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன் தலைமையில் நடந்த தென் மாநில காவல் துறைஅதிகாரிகளின் கூட்டத்தில், வீரப்பனைப் பிடிப்பதற்கான புதிய வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படிதான் தற்போது ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-->