சென்னை: கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.100 "பைன்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் குப்பைத் தொட்டிகளைத் தவிர மற்ற இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.100அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநகராட்சி கமிஷனர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னை நகரைத் தூய்மையாக வைத்திருப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள் குப்பைகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில்தான் கொட்ட வேண்டும். அதைவிட்டு விட்டு மற்ற இடங்களில் கொட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் கடை வைத்திருக்கும் அனைவரும் தங்கள் கடைகளின் முன்பாக குப்பை சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை மீறும் கடைகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றார் கலைவாணன்.
-->












Click it and Unblock the Notifications