இன்று காஞ்சி செல்கிறார் ஜெ.: ரூ.447 கோடியில் நலப் பணிகள் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.446.62 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு திட்டப் பணிகளை முதல்வர் ஜெயலலிதாஇன்று துவக்கி வைக்கிறார்.
சமீபத்தில் கடலூர் மற்றும் வேலூருக்குச் சென்ற ஜெயலலிதா,
அங்கு பல கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து, நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிலையில், இன்று மாலை காஞ்சிபுரம் செல்லும் முதல்வர், மாலை 3.30 மணிக்கு ரூ.446.62 கோடி மதிப்பிலானதிட்டப் பணிகளைத் துவக்கி வைக்கிறார்.
அதன் பின்னர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் ஜெயலலிதா வழங்குகிறார்.
பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவுக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமைவகிக்கிறார்.
ஜெயலலிதா வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications