உலக கோப்பை கிரிக்கெட்: கோலாகலமாக தொடங்கியது
கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா):
8வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா நேற்று தென் ஆப்பிரிக்க தலைநகரான கேப்டவுன் நகரில் கோலாகலமாக நடைபெற்றன.
உலகில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக் கோப்பைகிரிக்கெட் போட்டிகள் நேற்று இரவு வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின.
கேப் டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சிகளின்போது, 8வதுஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தென் ஆப்பிரிக்க அதிபர் தாபோ எம்பெக்கி முறைப்படி தொடங்கிவைத்தார்.
பின்னர் தென் ஆப்பிரிக்காவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும்வகையிலான கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 14 கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மைதானத்தைவலம் வந்தனர். அப்போது ஒவ்வொரு அணியின் கேப்டனும் தங்கள் நாட்டுக் கொடியை ஏந்திக் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் முதல் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும்வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதில் மோதுகின்றன.
பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இன்று மாலை (இந்திய நேரப்படி) 6 மணிக்கு தொடங்குகிறது.
-->












Click it and Unblock the Notifications