பாகிஸ்தானில் 4 இந்துக்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் 4 இந்துக்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.மேலும் 2 இந்துக்கள் குண்டுக் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கில் உள்ள குவெட்டா நகரில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நேற்று இரவுஅடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிகளுடன் புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த ஆறு இந்துக்களைத் தேடிப் பிடித்து அவர்களுடைய கைகளைக் கட்டினர்.
இதைத் தொடர்ந்து அந்த ஆறு பேரையும் அந்த வெறியர்கள் சராமாரியாகச் சுட்டுத் தள்ளினர். இதில் கைகள்கட்டப்பட்ட நிலையில் நான்கு பேர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
பலத்த துப்பாக்கிக் குண்டுக் காயம் அடைந்த மற்ற இரண்டு இந்துக்களும் பின்னர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.
அந்தக் கடையில் கொள்ளையடிப்பதற்காகவே அந்தக் கொலை வெறியர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications