பாளையங்கோட்டையில் நில அதிர்வு: பீதியில் வீடுகளை விட்டு மக்கள் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
பாளையங்கோட்டையில் நேற்று இரவு சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அலறிஅடித்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி. நகர், சீனிவாச நகர், ரகுமத் நகர், சாந்தி நகர் ஆகிய பகுதிகளில் நேற்றுஇரவு சுமார் 9.30 மணிக்கு திடீர் என்று வெடிச்சத்தம் கேட்டது.
இதையடுத்து நிலமும் லேசாகக் குலுங்கியது. இதனால் நில நடுக்கம்தான் வந்து விட்டதோ என்று பீதியடைந்தமக்கள், தங்கள் வீடுகளிலிருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆனாலும் யாருடைய உயிருக்கோ, பொருள்களுக்கோ எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.
இருந்தாலும் கடும் பீதியில் இருந்த மக்கள் இரவில் வீட்டுக்குள் போவதற்கே பயந்தனர். நள்ளிரவுக்கு மேல் சிறிதுபயம் குறைந்த பிறகுதான் அவர்கள் வீடுகளுக்குள் சென்றனர்.
-->












Click it and Unblock the Notifications