தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜ.க. போராட்டம்
சென்னை:
புதிய வீராணம் திட்டத்தை எதிர்த்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாரதீய ஜனதா கட்சியின்விவசாயிகள் அணி சார்பில் தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய வீராணம் திட்டத்தை கைவிடவேண்டும், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும், புஞ்சைப் பகுதிவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,000 நிதியுதவி அளிக்க வேண்டும், கர்நாடகம் தர வேண்டிய காவிரி நீரைஉடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசைவலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
சிவகங்கையில் நடந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. சட்டசபை துணைத் தலைவர் எச். ராஜா தலைமை வகித்தார்.
-->












Click it and Unblock the Notifications