For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் நீதிபதியை தாக்க முயற்சி: 4 வக்கீல்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் விஜயலட்சுமியைத் தாக்கமுயன்றதாக வக்கீல்கள் சங்கத் தலைவர், செயலாளர் உள்பட 4 வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு வழக்கின் போது வக்கீல் சுப்ரமணியம் என்பவரைத் தரக் குறைவாக பேசியதாகக் கூறி, விஜயலட்சுமியைஇடமாற்றம் செய்யக் கோரி வக்கீல்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

அப்போது திடீரென்று நீதிபதி அறைக்குள் புகுந்த வக்கீல்கள் அவருடைய இருக்கை, டைப்ரைட்டிங் இயந்திரங்கள்டெலிபோன் போன்றவற்றை அடித்து நொறுக்கினர். இதைத் தொடர்ந்து விஜயலட்சுமி போலீஸில் புகார்கொடுத்தார். அதில் தன்னைத் தாக்க முயன்றதாகவும், கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறியிருந்தார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வக்கீல்கள் சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் சுபாஷ் உள்ளிட்டநான்கு வக்கீல்களைப் போலீஸார் கைதுசெய்தனர். மேலும் 250 வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தச் செயலைக் கண்டித்து பூதப்பாண்டி நடுவர் மன்ற வக்கீல்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.இதையடுத்து வழக்குகளில் அவர்கள் கலந்து கொள்ளாததால் பூதப்பாடி நடுவர் மன்றம் இன்று வெறிச்சோடிகாணப்பட்டது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X