For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிதி நிறுவன மோசடி: ஆளுநரிடம் முதலீட்டாளர்கள் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நிதி நிறுவன மோசடியில் பறிபோன பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர உதவுமாறு கோரி பணத்தைப் பறிகொடுத்தஅனைவரும் ஆளுநர் ராமமோகன் ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தனியார் நிதி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் பணத்தை மோசடிசெய்தது தொடர் சங்கிலியாக நடந்தது. ஏராளமான மோசடி நிதி நிறுவன அதிபர்கள் வரிசையாகக் கைதாகினர்.

இதனால் பல கோடி ரூபாய் பணத்தை இழந்த நூற்றுக்கணக்கான மக்கள் புலம்பித் தவித்தனர். பின்னர் நிதிநிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சேர்ந்து தங்களுக்கென ஒரு சங்கத்தை அமைத்தனர்.

காவல் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்ட பின்னர் அவர்களுக்கு சிறிது சிறிதாகப் பணம் திரும்பக்கொடுக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் மிக சொற்பமான தொகை மட்டுமே அவர்களுக்கு இதுவரை திரும்பக்கிடைத்துள்ளது.

இந்நிலையில் நிதி நிறுவன அதிபர்களிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்து திரும்ப வழங்க உதவுமாறு கோரிஆளுநரிடம் முதலீட்டாளர்கள் இன்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

முன்னதாக அவர்கள் அனைவரும் ஊர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். அங்கு அவர்களின் பிரதிநிதிகள்சிலர் ராமமோகன் ராவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X