For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாத்தான்குளம் தேர்தலுக்குப் பின் மக்களுக்குக் காத்திருக்கும் ஷாக்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்குப் பின் மக்களுக்கு பெரும் ஷாக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. தேர்தல்முடிந்தவுடன் மார்ச் 1ம் தேதி முதல் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவே வெளியாகலாம்.

மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் தான் கட்டணத்தை உயர்த்தச் சொன்னது என்று கூறிக் கொண்டு இந்த கட்டண உயர்வுஅமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. மின்துறை ஒழுங்குமுறை வாரியம் பல தரப்பினருடன் பேசித் தான் மின் வாரியத்துக்குகட்டண உயர்வு குறித்து பரிந்துரைக்க வேண்டும்.

இந்த ஆணையம் அரசியல் கட்சிகள், விவசாயிகள் பிரிவினர் மற்றும் பிற அமைப்புகளுடன் மின் கட்டண உயர்வு குறித்துஆலோசனை நடத்திவிட்டது. ஆனால், மின் வாரியத்திடம் மட்டும் முழுமையாக ஆலோசனை நடத்தவில்லை.

சாத்தான்குளம் இடைத் தேர்தல் வருவதால் இப்போதைக்கு மின் வாரியத்தின் கருத்தைக் கேட்க வேண்டாம் என ஆணையத்துக்குஅரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மின் வாரியத்திடம் ஆணையம் கருத்து கேட்கும். அதுவும் மின் கட்டணத்தைஉயர்த்தலாம் என்று கருத்து சொல்லும். உடனே கட்டண உயர்வும் அமலுக்கு வரும்.

தினமும் மின் வாரியத்துக்கு சுமார் 6 கோடி அளவுக்கு கூடுதல் பணம் வகையில் (ஆண்டுக்கு ரூ. 2,100 கோடி) கட்டண உயர்வுஇருக்கும் என்று தெரிகிறது.

அச்சிறுப்பாக்கம், வாணியம்பாடியில் இடைத் தேர்தல் முடிந்தவுடன் தான் ரேசன் அரிசி விலை உயர்வை தமிழக அரசுஅறிவித்தது. அதுவரை அரிசி விலையை உயர்த்தாமல் இருந்தது. அதே போல சாத்தான்குளம் மக்களுக்கு ஷாக் தரப் போகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X