விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஜெட் ஏர்வேஸ் முன்னாள் பெண் ஊழியர் கைது
கோயம்புத்தூர்:
கோவை- பெங்களூர் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த ஜெட்ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில்பேசிய பெண், கோவையில் இருந்து பெங்களூர் புறப்பட உள்ள விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகமிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதையடுத்து கோவை விமான நிலையத்தைத் தொடர்பு கொண்ட பெங்களூர் ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள்குண்டு மிரட்டல் குறித்த தகவலைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அந்த விமானத்தில் முழுச் சோதனை நடத்தினர்.ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து இத் தகவலை வெளியிலேயே சொல்லாமல் அப்படியேமறைத்துவிட்ட அதிகாரிகள் விமானத்தை பெங்களூர் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இது தொடர்பாக கோவை மாநகர போலீசின் சிறப்புப் படை விசாரணை நடத்தியது. அப்போது அந்த மிரட்டல்தொலைபேசி அழைப்பு சிங்காநல்லூரில் உள்ள ஒரு எஸ்.டி.டி. பூத்தில் இருந்து வந்தது தெரியவந்தது.
உடனே அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு மட்டுமே அதன் பெங்களூர்அலுவலக போன் நம்பர் தெரியும் என்பதால் அந்தக் கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
எஸ்.டி.டி. பூத்தின் உரிமையாளர் தந்த அடையாளத்தை வைத்து விசாரித்தபோது அந்தப் பெண் ஜெட் ஏர்வேசின்முன்னாள் ஊழியராக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.
இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் பெண் ஊழியர்களிடம் படங்களை பெங்களூரில் இருந்து பெற்று எஸ்.டி.டி. பூத்உரிமையாளரிடம் காட்டி விசாரித்தபோது ஒரு பெண்ணை அவர அடையாளம் காட்டினார்.
கோவையைச் சேர்ந்த அந்தப் பெண் சமீபத்தில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம்செய்யப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அப் பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையும் இதே போன்ற மிரட்டல் தொலைபேசி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கோவை அலுவலகத்துக்கு வந்தது.இதனால் கோவை-மும்பை விமானம் வெடிகுண்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
-->