குடிசைக்கு தீவைத்து இளம் பெண் தற்கொலை?
சென்னை:
சென்னை அசோக் நகர் பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் இளம் பெண் உடல் கருகி இறந்தார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுறிது.
அசோக் நகர்- பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் மலர். இவரது குடிசையில் நேந்று பிற்பகல் திடீரென்றுதீப்பிடித்துக் கொண்டது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து மலரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் தீ வெகுவேகமாகக் கொளுந்து விட்டு எரிந்து பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.
இதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே மலர் கருகியநிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மலர் பரிதாபமாகஉயிரிழந்தார்.
மண்ணெண்ணை ஊற்றி அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்து காரணமாகஐந்து குடிசைகளும் கருகின. சம்பவம்நடந்த இடத்தை துணை மேயரான கராத்தே தியாகராஜன் பார்வையிட்டார்.
-->












Click it and Unblock the Notifications