ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்: சுவாமி
சென்னை:
ஐ.நா. பாதுகாப்பு சபையை மாற்றி அமைத்து அதில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
ஐ.நா. சபையின் அனுமதி இல்லாமல் ஈராக்கைத் தாக்கக் கூடாது என அமெரிக்காவுக்கு வெட்டியான அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறார் பிரதமர் வாஜ்பாய். இவரது பேச்சை யாரும் கேட்கப் போவதில்லை.
1971ம் ஆண்டு ஐ.நா. எதிர்ப்புக்கு இடையில் தான் பாகிஸ்தானைத் தாக்கி கிழக்கு பாகிஸ்தானை (வங்கதேசம்) விடுவித்ததுஇந்தியா. இதனால் இப்போது அமெரிக்காவுக்கு புத்தி சொல்வது தேவையற்ற செயல். ஈராக்குக்கு இந்தியா ஆதரவு தரவேண்டியதில்லை.
ஐ.நா. செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐ.நாவில் எந்த மாற்றமும் வரவில்லை. அதுசெல்லரித்துப் போன ஒரு அதிகார மையமாகத் தான் உள்ளது.
இதனால் ஈராக் போரை முடித்துவிட்டு ஐ.நாவை மாற்றி அமைக்கும் வேலையை அமெரிக்கா ஆரம்பிக்க வேண்டும். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கவேண்டும். வீடோ அதிகாரத்தையும் இந்த நாடுகளுக்கு வழங்க வேண்டும்.
பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற அணு ஆயுத நாடுகளுக்கு ஐ.நாவில் பாதுகாப்பு கவுன்சிலில் வீடோஅதிகாரம் இல்லாத உறுப்பினர் பதவி தரலாம்.
-->












Click it and Unblock the Notifications