For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோடைநெரிசலைத் தவிர்க்க 600 சிறப்பு ரயில்கள் தயார்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோடைகாலப் பயணிகள் நெரிசலைத் தவிர்ப்பதற்காக 600 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேதிட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நாகர்கோவில், திருவனந்தபுரம்,பாலக்காடு, கொல்லம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும்.

அதே போல மதுரையிலிருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள சாய்பாபாவின் அலுவலகம் அமைந்துள்ளபிரசாந்திநிலையத்திற்கு வாராந்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

கடந்த ஆண்டு விடப்பட்ட சிறப்பு ரயில்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இதையடுத்து இந்தஆண்டும் சிறப்பு ரயில்களை விட தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இருப்பினும் கடந்த ஆண்டு விடப்பட்ட சிறப்பு ரயில்களை (978) விட இந்த ஆண்டு குறைவான ரயில்களேவிடப்படுகின்றன. காரணம், வழக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயில்களின் எண்ணிக்கை அதிகமாகஇருப்பதால்தான் என்கிறது தெற்கு ரயில்வே.

-ஏப்ரல் முதல் "திருக்குறள்" எக்ஸ்பிரசில் மினி தியேட்டர்:

இதற்கிடையே கன்னியாகுமரிக்கும் டெல்லிக்கும் இடையே இயக்கப்படும் "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ரயிலில் வரும்ஏப்ரல் மாதம் முதல் மினி தியேட்டர் இயங்கும் என்று ரயில்வே இணை அமைச்சரான ஏ.கே. மூர்த்தி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, டிக்கெட் முன் பதிவு வசதியைத்துவக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

நீண்ட தூர ரயில்களில் மினி தியேட்டரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக"திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ரயிலில் விரைவில் மினி தியேட்டர் அமைக்கப்படவுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தியேட்டரில் படங்கள் ஒளிபரப்பப்படும். சுமார் 100 பேர் அமர்ந்து படம் பார்க்கவசதி கொண்ட இந்தத் தியேட்டரில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடப்படும்.

தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்கள் இதில் திரையிடப்படும் என்றார் மூர்த்தி.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X