ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை இரவில் வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களைக் குறிவைத்துத் தாக்கி, அவர்களை மிரட்டிபணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தங்கள் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணம் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக ஏ.டி.எம். மையங்களைவங்கிகள் அமைத்துள்ளன.

சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெருநகரங்களில் ஏ.டி.எம். மையங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சென்னையில் ஏ.டி.எம். கார்டுகள், கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களை இரவு நேரங்களில்வழிமறித்துத் தாக்கி, மிரட்டி, அவர்களை அந்த மையங்களுக்கு அழைத்துச் சென்று பணத்தை எடுக்கச் செய்துஅதைப் பறித்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஏ.டி.எம். கார்டுதாரர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

வடபழனியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனியார் ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றுஇரவு அவர் தன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரைச் சிலர் வழிமறித்தனர்.

வெங்கடாசலத்தைக் காரை விட்டு இறங்குமாறு கூறிய அந்த மர்ம நபர்கள், அவரைத் திடீரென்று சராமாரியாகத்தாக்கினர். பின்னர் அவரிடமிருந்த தங்கச் செயின், பணம் ஆகியவற்றை அவர்கள் பறித்துக் கொண்டனர்.

இதையடுத்து அவருடைய பர்சையும் சோதனை போட்ட அவர்கள், அதில் ஏ.டி.எம். கார்டு இருப்பதைக்கண்டுபிடித்தனர். உடனே அவருடைய காரிலேயே ஏறிக் கொண்ட அந்த நபர்கள், குறிப்பிட்ட ஏ.டி.எம்.மையத்தை நோக்கிக் காரைச் செலுத்துமாறு வெங்கடாசலத்தை மிரட்டினர்.

ஏ.டி.எம். மையத்துக்குச் சென்ற பின்னர் அவரை மேலும் மிரட்டிய அந்த நபர்கள், அங்கிருந்து பணம் எடுத்துக்கொண்டு வருமாறு கூறினர். பின்னர் அவர் கொண்டு வந்த ரூ.11,000 பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து வெங்கடாசலம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவரும் இதே போலவே சிலவழிப்பறிக் கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டார்.

அவரைக் கிரிக்கெட் மட்டையால் அவர்கள் சராமாரியாகத் தாக்கினர். இதனால் அவர் மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

பின்னர் ரவிச்சந்திரனிடம் ஏ.டி.எம். கார்டு இல்லை என்று தெரிந்தவுடன் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.இதன் பிறகு ரவிச்சந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சென்னையில் கடந்த வாரம் மட்டும் இதுபோன்ற ஏ.டி.எம். கார்டுதாரர்கள் மீதான 10 தாக்குதல் புகார்கள்வந்துள்ளதாகத் தெரிவித்த போலீசார், இந்த "ஏ.டி.எம்." வழிப்பறிக் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

பெரும்பாலும் இரவு நேரங்களில் தனியே வருபவர்களைத் தான் இந்தக் கும்பல்கள் தாக்கி வருகின்றன. ஏ.டி.எம்.மையங்களுக்கு வெளியே கையில் அரிவாள், பட்டாக் கத்திகளுடன் கும்பல் நின்று கொள்ள ஒருவன் மட்டும் கார்டுவைத்திருப்பவருடன் ஏ.டி.எம். மெசின் வரை வந்து பணத்தைப் எடுக்கச் செய்து பறிக்கின்றனர்.

இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், உயிர் பயத்தால் யாரும் இக் கும்பல்களுடன் மோதவோ,உதவி கேட்டு குரல் எழுப்பவோ முடியாமல் போய்விடுவதாக போலீசார் கூறுகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+