பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாய் சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலாசூர் (ஒரிஸ்ஸா):
இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாகத் தயாரித்துள்ள பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனையிடப்பட்டது.
ஒரிஸ்ஸாவில் பாலாசூர் அருகே கடலில் இச் சோதனை நடந்தது. கப்பலில் இருந்து, நீர் மூழ்கியில் இருந்தும் செலுத்தப்படும் இந்த ஏவுகணை290 கி.மீக்கு அப்பால் வரும் எதிரி நாட்டுக் கப்பல்களைக் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
ஐ.என்.எஸ். ராஜ்புத் என்ற இந்தியப் போர்க் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை இன்று பிற்பகலில் செலுத்தப்பட்டது. ரஷ்யாவின்வடிவமைப்பும், இந்தியாவின் கம்ப்யூட்டர்களையும் கொண்டது இந்த ஏவுகணை.
ஒலியைவிட 2 மடங்கு வேகத்தில் பூமியில் இருந்து 14 கி.மீ. உயரத்தில் பறந்து சென்று பின்னர் இலக்கை தேடிக் கண்டுபிடித்துத் தாக்கும்திறன் கொண்டது பிரம்மோஸ்.
இன்றைய சோதனையை 40க்கும் மேற்பட்ட ரஷ்ய விஞ்ஞானிகளும் இந்திய விஞ்ஞானிகளும் நேரில் பார்த்தனர்.
-->












Click it and Unblock the Notifications