திமுக ஆட்சியில் நடந்த தேங்காய் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திமுக ஆட்சி காலத்தில் நடந்த கொப்பரைத் தேங்காய் கொள்முதல் ஊழல் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகபுதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

விவசாயிகளிடம் இருந்து கொப்பரைத் தேங்காயை அரசு கொள்முதல் செய்ததில் இந்த ஊழல் நடந்தது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டவேளாண்மை கூட்டுறவு வங்கியில் தான் பெரும் ஊழல் நடந்தது.

திமுக ஆட்சியில் இந்த வங்கி மூலம் ஒரே ஆண்டில் ரூ. 2.8 கோடிக்கு தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து அரசு வாங்கியது. 189விவசாயிகளிடம் தேங்காய் வாங்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இதில் 174 பேருக்கும் விவசாயத்துக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. இவர்கள் அனைவருமே திமுக கரை வேட்டிகள்.

ஆனால், இக் கும்பலை விவசாயிகளாகக் கூட்டுவதற்காக வி.ஏ.ஓவின் போலிச் சான்றுகளும் தயாரிக்கப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாககீரனூர் திமுக ஒன்றியத் செயலாளர் மற்றும் சில திமுக முக்கியப் புள்ளிகளின் வீடுகள், கடைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனைநடத்தினர்.

இந்த கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்து திமுகவைச் சேர்ந்த அன்புச் செல்வம், திமுகவைச் சேர்ந்த கண்ணைய்யா, சட்டவிரோதமாகஆற்றில் மணல் அள்ளும் கும்பலைச் சேர்ந்த அண்ணாதுரை உள்ளிட்டவர்களின் வீடுகளில் இச் சோதனைகள் நடந்தன.

திமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவின் பினாமியான அருண என்பவரின் திருச்சி வீட்டிலும் சோதனைநடந்தது. இந்த வீட்டில் மட்டும் ரூ. 1.5 லட்சம் சொத்துப் பத்திரங்கள், கணக்கில் இல்லாத பணம் ரூ. 61,000 ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்த ரெய்டில் சிக்கிய அனைத்து ஆவனங்கள், சொத்துக்களும் புதுக்கோட்டை தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த ரெய்டுகள் மேலும் தொடரும் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+