For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுடவில்லை: தூதர் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடுநடத்தவில்லை என்று இந்தியவுக்கான இலங்கைத் துணைத் தூதர் சுமித் நிகந்தலா தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களைஇலங்கை கடற்படை சுட்டுத் தள்ளுவதாக சில பத்திரிககைகளில் செய்திகள் வந்துள்ளது. ஆனால், அவை தவறானசெய்திகளாகும்.

இது போன்ற நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபடவில்லை. ஏற்கனவே, இலங்கைக்கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கும்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் தவறான செய்திகள் வருவது வருத்தம் தருகிறது.

இது தொடர்பான உண்மை நிலை குறித்து விரைவில் தமிழக மீனவர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து விளக்குவேன்.

இவ்வாறு தூதர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X