மணிரத்னம் அலுவலகத்தில் நுழைந்த 2 திருடர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்குள் நிருபர்கள் என்று கூறிக் கொண்டு நுழைந்த 2திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரோஜா, பாம்பே படங்ளுக்குப் பின் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருக்கிறார் மணிரத்னம். இதையடுத்து அவருக்கு நிரந்த போலீஸ்பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

இந் நிலையில் மணிரத்னத்தில் அலுவலகத்தில் எடிட்டிங் குறித்த பயிலரங்கம் ஒன்று நடந்தது. இதில் பங்கேற்க நிருபர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

அப்போது 2 பேர் தங்களை நிருபர்கள் என்று கூறிக் கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்தனர். நிருபர்கள் என்பதால் போலீசாரும்அவர்களை அனுமதித்தனர். ஆனால், மணிரத்னத்தின் உதவியாளர்கள் அவர்கள் நிருபர்கள் இல்லை என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.

உடனே அவர்களை போலீசாரின் துணையுடன் மடக்கினர். விசாரணையில் இருவருமே திருடர்கள் என்று தெரியவந்தது. அவர்கள்தீவிரவாதிகள் இல்லை என்றும் உறுதியாகிவிட்டது. ஆனாலும், அத்துமீறி மணிரத்னத்தின் அலுவலகத்தில் நுழைந்ததாக இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+