கடும் வறட்சியால் முதுமலை சரணாலயம் மூடப்படுகிறது
முதுமலை:
வறட்சி காரணமாக முதுமலை விலங்குகள் சரணாலயம் 2 மாதங்களுக்கு மூடப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தேசிய விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு தற்போது கோடை கால வறட்சிதொடங்கிவிட்டது. காட்டில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வற்றிக் கிடக்கின்றன.
பல பகுதிகளில் மரங்கள் இலைகள் இன்றி நிற்கின்றன. செடிகள் கருகி விட்டன. கடும் வெயில் காரணமாக காட்டுத்தீ விபத்துக்களும் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
இந் நிலையில் வறட்சியை சமாளிக்க வனவிலங்குகள் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.விலங்குகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைத் தடை செய்து காட்டுக்குள் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வனவிலங்குகள்துறை முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 16ம்தேதி முதல் 2மாதங்களுக்கு சரணாலயம்மூடப்படவுள்ளது.
இத் தகவலை வனவிலங்குகள் பாதுகாவலர் அசோக் தெரிவித்துள்ளார்.
-->