நடிகை நளினியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவர்கள்
சென்னை:
ரயிலில் பயணம் செய்த நடிகை நளினியை,தொட்டுப் பேசமுயன்று, கலாட்டா செய்த 3 மாணவர்களை ரயில்வேபோலீஸார் கைது செய்து அபராதம் விதித்தனர்.
நடிகை நளினி தற்போது சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு டிவி சீரியல்களில் தான் நடித்து வருகிறார். ஒருசீரியல் படப்பிடிப்புக்காக, திருச்சி செல்ல சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.
இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த நளினியைப் பார்த்த பயணிகள் சிலர் அவருக்கு ஹலோ சொல்லிகை குலுக்கினர்.
அப்போது அருள்முருகன், ராஜா, ராம்பிரசாத் ஆகிய 3 மாணவர்களும், நளினியை நெருங்கினர். அவரைத்தொட்டும், தடவியும் பேச ஆரம்பித்தனர். அப்போது நளினியுடன் வந்த 3 பேர், மாணவர்களை எச்சரித்துஅங்கிருந்து அப்புறப்படுத்தமுயன்றனர்.
இதையடுத்து இந்த மாணவர்கள் அவர்களைத் தாக்கினர்.
இந்த நேரத்தில் ரயில், விழுப்புரத்தை அடைந்தது. ரயிலைவிட்டு இறங்கிய நளினி, அங்கிருந்த ஸ்டேசன் மாஸ்டர்,ரயில்வே போலீசாரிடம் வாய்மொழியாகப் புகார் கொடுத்தார்.
அதற்கு எழுத்துப் பூர்வமாக புகார் கொடுக்குமாறும், மாணவர்களைக் கைது செய்ய்தாகவும் போலீஸார்நளினியிடம் கூறினர்.
ஆனால், அவ்வளவு கடுமையான தண்டனை தேவையில்லை. இதனால் அவர்களது படிப்பும் வாழ்க்கையும்கெட்டுவிடும் என்று கூறிய நளினி எழுத்துப் பூர்வமாக புகார் கொடுக்கவில்லை விரும்பவில்லை என்றுகூறிவிட்டார்.
இருப்பினும் ஈவ் டீசிங் செய்ததாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் 3 மாணவர்களுக்கும்ரயில்வே போலீஸார் அபராதம் விதித்தனர்.
அபராதம் கட்டியபின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். இதன் பிறகு தான் ரயில் புறப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications