For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானில் பின் லேடனின் மகன்?

By Staff
Google Oneindia Tamil News

ரியாத்:

சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனின் மூத்த மகன் சாத் தற்போது ஈரானில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் பின் லேடனின் அல்-காய்தா தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருந்த அந்தத் தீவிரவாதிகள் மீது அமெரிக்கபடை கடும் தாக்குதல் நடத்தியது.

அந்தச் சமயத்தில் பின் லேடனுடன் ஆப்கானிஸ்தானில்தான் சாத்தும் இருந்தான். அமெரிக்காவுக்கு எதிரானதாக்குதல் நடத்தும் அல்-காய்தா படையினரை அவன்தான் வழிநடத்திச் சென்று கொண்டிருந்தான்.

இந்நிலையில் தற்போது சாத் ஈரானில் இருப்பதாக சவூதி அரேபியாவில் வெளியாகும் அல்-ஷார்க் அல்-அவ்சாத்என்ற பத்திரிக்கை கூறியுள்ளது.

ஆனால் பின் லேடன் ஈரானில் இல்லை என்றும் கூறும் அப்பத்திரிக்கை, எனவே அமெரிக்கத் தாக்குதலில் பின்லேடன் இறந்து போயிருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் கூறுகிறது.

அமெரிக்கா மீது கடுமையான தாக்குதல் நடத்த ஈராக் மக்களுக்கு பின் லேடன் அழைப்பு விடுக்கும் செய்தியைஓரிரு நாட்களுக்கு முன்புதான் அல்-ஜசீரா டி.வி. ஒளிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பின் லேடனின் புதிய ஆடியோ கேசட் ஒன்று தங்களிடம் இருப்பதாக பிரிட்டிஷில் வெளியாகும்அல்-அன்சார் என்ற இஸ்லாமியப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

அந்தக் கேசட்டில் பேசியுள்ள பின் லேடன், திருக்குரானிலிருந்து சில வாசகங்களை மேற்கோள் காட்டியுள்ளதாகஅப்பத்திரிக்கையைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவர் தெரிவித்துள்ளார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X